"தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கக் கூடாதா?"
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கு.பாரதி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப் படியாக 75 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கும் அரசு, தூய்மை பணியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.