#armstrongmurder #sambosenthil ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு உதவியவர் விமான நிலையத்தில் கைது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியாவிலிருந்து சென்னை வந்த முகமது ரிஸ்வான் அலியை லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல விசா மற்றும் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து உதவியதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.