#ammk #admk #ndaalliance அதிமுகவிலிருந்து ரெட்டியார்பட்டி நாராயணன் விலகல் அதிமுகவில் உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை எனக்கூறி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதும், தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளுமே இந்த முடிவுக்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.