அரசியல்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிவசேனா எம்.பி. விலகல்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

தந்தி டிவி

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு

ஆதரவு தேவையென்றால் அக்கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிபந்தனை விதித்திருந்தார். இதையடுத்து சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த்

தாம் வகித்து வந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமரின் பரிந்துரைப்படி குடியரசு தலைவர் ஏற்று கொண்டதாக ராஸ்டிரபதி பவன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அரவிந்த் சாவந்த் பொறுப்பு வகித்த கனரக தொழில் துறையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்