அரசியல்

சரத்பவாருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு

மும்பையில் சரத்பவாரை நள்ளிரவில் சிவசேனா கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
மும்பையில் சரத்பவாரை நள்ளிரவில் சிவசேனா கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் பங்கேற்றனர். அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பின்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் ஆகியவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்