அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு

தந்தி டிவி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமினால், ஊழல் வழக்கு சாட்சிகள் அச்சமடைந்துள்ளனரா என்பது குறித்த மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு தள்ளி வைத்துள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றதால், வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமனற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது, ஏற்கெனவே

அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஏ.ஜி. மாசி இடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து விசாரணையை நீதிபதி அபய் எஸ். ஒகா, டிசம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அமலாக்கத் துறை இணை இயக்குநர் கார்த்திக் தாசரி சார்பில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தெளிவாக அவமதிக்கும் செந்தில் பாலாஜியின் செயல்பாடு பண மோசடி வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவதையும், காலந்தாழ்த்துவதையும் தெளிவாக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி