அரசியல்

செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்

கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில், கூட்டுறவுத்துறை சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர், பங்க்கை திறந்து வைத்தனர். விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை பணக்காரத்துறை என்றும், பணக்கார அமைச்சரான செல்லூர் ராஜூ இங்கு உள்ளதாகவும் கூறினார். இப்பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அதே மேடையில் உறுதியளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை