அரசியல்

செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்

கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில், கூட்டுறவுத்துறை சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர், பங்க்கை திறந்து வைத்தனர். விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை பணக்காரத்துறை என்றும், பணக்கார அமைச்சரான செல்லூர் ராஜூ இங்கு உள்ளதாகவும் கூறினார். இப்பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அதே மேடையில் உறுதியளித்தார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா