அரசியல்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை - "ஆக.7 முதல் ஆக.18 வரை..." - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

11ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது...

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனறி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமையை கண்டறியவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் நடத்தப்படும் இந்த தேர்வு மூலமாக, 500 மாணவிகள், 500 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், கொள்குறி வகையில் இரண்டு தாள்களாக போட்டித் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வரும் ஏழாம் தேதி முதல் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டு, தேர்வு செய்யப்படும் ஆயிரம் மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்