மகளிருக்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் - சபா ராஜேந்திரன் கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய அவர் பெண்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும், திமுகவை ஆதரித்து வாக்களித்தால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வார் என தெரிவித்தார். மேலும், பெண்களுக்காக திமுக பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் 2000 ரூபாய் உயர்த்தப்படுவதோடு, எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுக்கும் திட்டம் என திமுகவின் திட்டங்களை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்தார்....