அரசியல்

சசிகலா 27 - ம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தகவல்

சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.

தந்தி டிவி

சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.சசிகலாவை, திட்டமிட்டபடி, 27 ஆம் தேதி விடுதலை செய்ய்பபடுவதற்கான பூர்வாங்க பணிகள், நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை குடியரசு தினம் என்பதால் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் அதிகம் இருக்கும் என்பதால் சசிகலாவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இன்றைய தினமே தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து, வரும், 27 ஆம் தேதி காலை பத்தரை மணி அளவில், சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் விடுதலை தொடர்பான பத்திரங்களில் கையெழுத்து பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சிறைக் கைதியாக இருக்கும் சசிகலாவுக்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. சிறையில் அவர் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், சிறையில் சம்பளம் வழங்கும் எந்த பணியையும் அவர் தேர்வு செய்து பணியாற்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகும் சூழலில் அன்றைய தினமே உடல் நலத்தில் முழுமையான முன்னேற்றம் அடைந்திருப்பதை மருத்துவமனை உறுதி செய்யும் பட்சத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட வாய்ப்புகள் உள்ளன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு