நடிகரும், பாஜக பிரமுகருமான சரத் குமார், தனக்கு பாஜகவில் பொறுப்பு வழங்க வலியுறுத்தி, கட்சியின் மாநில மற்றும் தேசியத் தலைமைக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய சரத்குமார், தேசிய அளவில் பொறுப்பு வழங்குவதாக சேர்த்துவிட்டு, எந்த பொறுப்பையும் வழங்காமல் சோர்வடைய வைத்துவிட்டதாக ஆதங்கம் தெரிவித்தார்.