தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பெயர் மற்றும் புகைப்படத்தை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தஞ்சையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சைதை துரைசாமி தஞ்சையில் நடைபெற்ற எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், எம்ஜிஆரின் புகைப்படம் மற்றும் பெயரை பல்கலைக்கழகத்தின் இணையத்தில் இருந்து நீக்கியதை வன்மையாக கண்டித்தார்.