அரசியல்

தெலுங்கானா முதல்வராகிறார் "ரேவந்த் ரெட்டி"..டெல்லியில் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக கருதப்படும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை முதல்வராக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லி வந்துள்ள ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்களை சந்தித்து, தன்னை முதல்வராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருமாறும் அவர் நேரில் அழைப்பு விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்