அரசியல்

தெலுங்கானா முதல்வராகிறார் "ரேவந்த் ரெட்டி"..டெல்லியில் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக கருதப்படும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை முதல்வராக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லி வந்துள்ள ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்களை சந்தித்து, தன்னை முதல்வராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருமாறும் அவர் நேரில் அழைப்பு விடுத்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்