அரசியல்

தெலுங்கானா முதல்வராகிறார் "ரேவந்த் ரெட்டி"..டெல்லியில் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றிக்கு காரணமாக கருதப்படும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை முதல்வராக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் நாளை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லி வந்துள்ள ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்களை சந்தித்து, தன்னை முதல்வராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார். நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவிற்கு வருமாறும் அவர் நேரில் அழைப்பு விடுத்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்