AIADMK | "உங்களை நம்பி தான்.." - வீடுவீடாக வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் #aiadmk #campaign #thanthitv திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தனது ஆதரவாளர்களுடன் திறந்த வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுபூலுவபட்டி பகுதிக்கு உட்பட்ட 25, 24 மற்றும் 12-வது வார்டுகளில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். சிறுபூலுவபட்டி பகுதியில் வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்குக் 'கிரீடம்' அணிவித்துச் சிறப்பித்த அதிமுகவினர், தொகுதி மக்களின் பேராதரவுடன் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் என தெரிவித்தனர்...