தமிழகத்தில் கால் பதித்த ரீகல் ஜூவல்லரி - சென்னை தி.நகரில் முதல் கிளை கோலாகல துவக்கம்
ரீகல் ஜூவல்லரி - முதல் கிளை தி.நகரில் கோலாகல துவக்கம் தமிழகத்தில் முதல்முறையாக கால் பதித்த ரீகல் ஜூவல்லரி நிறுவனம், சென்னை தி.நகரில் தனது முதல் கிளையை திறந்துள்ளது. வடக்கு உஸ்மான் சாலையில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன், ரீகல் ஜூவல்லரியின் முதல் கிளை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்தில் கிளையை தொடங்கியுள்ளதாகவும், அடுத்தகட்டமாக புதுச்சேரியிலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பல்வேறு கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக ரீகல் ஜுவல்லரி நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் கூறினார்.