கொரோனா தொற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன், கடன் வழங்கும் திறனை அதிகரிக்க உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தமது பதிவில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை சிறு தொழில்கள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.