அரசியல்

ஆர்.பி.உதயகுமாருக்கு டோஸ் விட்ட ஐகோர்ட் மதுரை பெஞ்ச் | rb udhayakumar

தந்தி டிவி

இடையூறாக உள்ள நக்கீரர் நுழைவாயிலை அப்புறப்படுத்த உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜைனப் பீவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள நக்கீரர் நுழைவாயினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஏராளமான விபத்து நடைபெற காரணமாக உள்ளதால், அதை அகற்ற உத்தரவிட கோரியுள்ளார். நினைவு சின்னமாக உள்ள நுழைவு வாயிலை இடிக்க கூடாது என கூறி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், அந்த நுழைவாயிலை மனுதாரர் பாதுகாக்க நினைத்தால், மாட்டுத்தாவணி எதிரே இருபுற சாலைகளிலும் உள்ள இடங்களை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைக்கலாம் என கூறினர். ஆர்.பி. உதயகுமார் தரப்பில், வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தால் உரிய ஆவணங்களை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர். வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை செய்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு