அரசியல்

ஏழு பேர் விடுதலை தொடர்பாக புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

14 ஆண்டுகள் சிறை தண்டனையை கழித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-இன் படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவு என்பது அரசின் முடிவுதானே தவிர ஆளுநரின் முடிவு அல்ல என்றும், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநரின் ஒப்புதல் என்பது ஒரு சடங்கு மட்டுமே என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளதாக திருமாவளவன் தெரிவித்து உள்ளார். எனவே, உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பின் படி, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை