அரசியல்

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் பா.ஜ.க. கொள்கைகளுக்கு வரவேற்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்பது கட்சியில் உள்ளவர்களின் ஒருமித்த கருத்தாகும் என்று அவர் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. பெரிய வெற்றியை பெற்றிருப்பது உண்மைதான் என்று கூறிய அவர் , நேரு, இந்திராகாந்திக்கு பிறகு மோடி பெரும் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் பா.ஜ.க. கொள்கைகளுக்கு வரவேற்பு இல்லை என்று கூறிய கார்த்தி சிதம்பரம் பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சியாகதான் தமிழக மக்கள் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு