அரசியல்

தேர்தல் தோல்வி : ராஜினாமா செய்ய ராகுல் முடிவு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார்.

தந்தி டிவி
மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்துள்ளார். புதுடெல்லியில், இன்று நண்பகலில் கூடிய அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தமது ராஜினாமா முடிவை ராகுல்காந்தி வெளியிட்டார். இதனால், கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். ராகுலின் முடிவை செயற்குழு உறுப்பினர்கள் திட்டவட்டமாக ஏற்க மறுத்தனர். எனவே, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ராகுல்காந்தியின் ராஜினாமா ஏற்கப்படுமா? என்பது, செயற் குழு கூட்டத்திற்கு பின்னரே தெரிய வரும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்