அரசியல்

ரபேல் விவகாரம் : பிரதமர் மீது ராகுல்காந்தி நேரடி குற்றச்சாட்டு

ரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
ரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய குழுவின் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தி உள்ளதாக ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பில் இந்திய தரப்பில் அனில் அம்பானியை தேர்வு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியது சரியானது தான் என்பது ராணுவ அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து நிரூபணம் ஆகி உள்ளது என்றும், இது ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குற்றவாளி என்பதை காட்டுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்