அரசியல்

ரபேல் விவகாரம் : பிரதமர் மீது ராகுல்காந்தி நேரடி குற்றச்சாட்டு

ரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
ரபேல் போர் விமான ஒப்பந்த பேர விவகாரத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய குழுவின் பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தி உள்ளதாக ராகுல்காந்தி புகார் தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பில் இந்திய தரப்பில் அனில் அம்பானியை தேர்வு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறியது சரியானது தான் என்பது ராணுவ அமைச்சகத்தின் குறிப்பில் இருந்து நிரூபணம் ஆகி உள்ளது என்றும், இது ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குற்றவாளி என்பதை காட்டுவதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு