புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்களை வைத்து முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்தார். தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சாமி கோவிலில் நடைபெற்ற இந்தப் பூஜையைத் தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு எலுமிச்சை பழங்களைப் பிரசாதமாக வழங்கினார். முன்னதாக, கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பணிகளால் ஒரு வாரமாகத் தடைப்பட்டிருந்த தனது வழக்கமான டென்னிஸ் விளையாட்டை, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக விளையாடி முதலமைச்சர் ரங்கசாமி உற்சாகமடைந்தார்.