அரசியல்

வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு தொடருவேன் - என்.ஆர்.காங். வேட்பாளர் புவனேஷ்வரன்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வரன், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்யவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று தெரிவித்த புவனேஷ்வரன், இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது, இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு