அரசியல்

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் - இருசக்கர வாகனத்தில் வாக்குசேகரித்த முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதை ஒட்டி, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக, முதலமைச்சர் நாராயணசாமி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதை ஒட்டி, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக, முதலமைச்சர் நாராயணசாமி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ஏனாம் நில விவகாரத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் கிரண்பேடி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினை குறை கூற, கிரண்பேடிக்கு தகுதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு