அரசியல்

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா - சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, 49 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அவருடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி சட்டமன்ற வளாகம் முழுவதும் சுகாதார துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு முதல்வர் அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. மேலும் தெர்மா ஸ்கேனர் மூலமாக பரிசோதனை செய்த பிறகே, சட்டமன்ற வளாகத்திற்குள் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்