மே-17ஆம் தேதிக்கு பிறகும், சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என, பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து தெரிவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நேற்று மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, அனைத்து சூழ்நிலைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.