அரசியல்

"மின் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது" - சட்டமன்ற வாயிலில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏ போராட்டம்

யூனியன் பிரதேசங்களில் உள்ள மினதுறைகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

யூனியன் பிரதேசங்களில் உள்ள மினதுறைகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபடக்கூடாது எனக்கூறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் சட்டமன்ற வளாகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் மின்துறை முதுநிலை பொறியாளர், வரும் 22ஆம் தேதி ஊழியர்கள் அறிவித்திருந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறியதை அடுத்து, வையாபுரி மணிகண்டன் போராட்டத்தைக் கைவிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்