அரசியல்

"மின் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது" - சட்டமன்ற வாயிலில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏ போராட்டம்

யூனியன் பிரதேசங்களில் உள்ள மினதுறைகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

யூனியன் பிரதேசங்களில் உள்ள மினதுறைகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபடக்கூடாது எனக்கூறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் சட்டமன்ற வளாகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் மின்துறை முதுநிலை பொறியாளர், வரும் 22ஆம் தேதி ஊழியர்கள் அறிவித்திருந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறியதை அடுத்து, வையாபுரி மணிகண்டன் போராட்டத்தைக் கைவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை