Public examination amendment bill | தேர்வு முறைகேடுகள்..பார்லிமென்டில் ஓப்பனாக எச்சரித்த அமைச்சர் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 'பொதுத் தேர்வுகள் திருத்தச் சட்ட மசோதா' மீதான விவாதத்தை மக்களவையில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடக்கி வைத்தார்.வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் உரையாற்றியுள்ளார்.சுதந்திர இந்தியாவில் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முதன்முதலாகத் தேர்வு முறைகேடு தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தது தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.2024ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொதுத் தேர்வுகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதா மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது