பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று புதிய நான்கு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்துடன் பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது வழி நெடுகிலும் அவருக்காக காத்து நின்ற மக்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.