கடலூர் மாவட்டத்தில் களமிறங்கும் பிரேமலதா, திருமாவளவன் 9 தொகுதிகள் கொண்ட கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோயிலில் விசிக தலைவர் திருமாவளவன், விருத்தாச்சலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 3 கட்சித் தலைவர்கள் களம் காண்கின்றனர். மேலும், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இதனால், கடலூர் மாவட்டம் தேர்தலில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.