அரசியல்

கூட்டுறவு சங்க தேர்தல்களை தள்ளிவையுங்கள் - ஸ்டாலின்

வரும் 16-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒருதலைபட்சமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க வினரின் முறைகேடுகளுக்கு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் துணை போயிருப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய களங்கம் என்றும், இந்த மிக மோசமான ஜனநாயக படுகொலையை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே, முறைகேடுகளுக்கு வித்திட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் முடியும் வரை, வரும் 16-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்களை தள்ளிவைக்க வேண்டும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தை, ஸ்டாலின கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்