அரசியல்

ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர்.

தந்தி டிவி

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர். அப்போது,19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை அளித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் என்.பி.பிரஜாபதி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ஓரிரு நாளில் பாஜகவில் முறைப்படி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு