அரசியல்

ம.பி. சபாநாயகரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் - காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் ஒப்படைப்பு

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர்.

தந்தி டிவி

மத்திய பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, நரோட்டம் மிஷ்ரா மற்றும் பாஜக தலைவர்கள், அம்மாநில சபாநாயகரை சந்தித்தனர். அப்போது,19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை அளித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் என்.பி.பிரஜாபதி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ஓரிரு நாளில் பாஜகவில் முறைப்படி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே