அரசியல்

"தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி

தீவிரவாதம் வேரோடு அறுக்கப்பட்டுவிட்டது

தந்தி டிவி
சட்டப்பேரவையில், காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேட்டி அளித்து வருவதாகவும், அவரை ஏன் இந்த அரசு கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.மத்திய அமைச்சர் சொல்வது உண்மையா என்பதை விளக்க வேண்டும், இல்லை எனில், மத்திய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் தீவிரவாதம் வேரோடு அறுக்கப்பட்டுவிட்டது என்றார். மேலும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக