அரசியல்

PM மோடி குமரி மண்ணில் கால்வைக்கும் முன்னே... ஹை-கோர்ட்க்கு பறந்த மனு..!

தந்தி டிவி

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அளித்துள்ளது.

காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை தடுக்கக்கூடாது என்றும், கடைகளை மூடும்படி வியாபாரிகளை வற்புறுத்தக்கூடாது என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அதை ஏற்க மறுத்து விட்டதாகவும், சுற்றுலா பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் காங்கிரசின் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்