அரசியல்

PM மோடி குமரி மண்ணில் கால்வைக்கும் முன்னே... ஹை-கோர்ட்க்கு பறந்த மனு..!

தந்தி டிவி

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அளித்துள்ளது.

காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை தடுக்கக்கூடாது என்றும், கடைகளை மூடும்படி வியாபாரிகளை வற்புறுத்தக்கூடாது என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அதை ஏற்க மறுத்து விட்டதாகவும், சுற்றுலா பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் காங்கிரசின் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி