அரசியல்

தேர்தல் முடிவுகள் குறித்து மனம் விட்டு பேசிய பிரதமர் மோடி

தந்தி டிவி

தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்கள் சேவை செய்வதற்கு இந்திய மக்கள் வாய்ப்பளித்தது என் அதிர்ஷ்டம் என்று, இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, முதல் நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு தேர்தல் நடைமுறையும் நியாயமானதாக வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது என்று கூறினார். இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியது தனது அதிர்ஷ்டம் என்று கூறிய பிரதமர் மோடி, இந்த வரலாற்று வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி மட்டுமன்றி ஒட்டுமொத்த ஜனநாயக உலகிற்கும் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து வரும் காலங்களில் பசுமையான யுகத்தை உருவாக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்காக வாழ்க்கை என்ற திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்