அரசியல்

"வேளாண் சட்டம் - விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம்" - பிரதமர் மோடி உரை

வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு டெல்லியில் இருந்தவாறு, காணொலி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிகாரில் உள்ள 45 ஆயிரத்து 945 கிராமங்களும் கண்ணாடி இழை வழி இணைய சேவை மூலம் இணைக்கப்படும் வகையில், கண்ணாடி இழை வழி சேவையையும் அவர் துவக்கி வைத்தார்.அப்போது பேசிய அவர், பீகாரின் வளர்ச்சி பயணத்தில் இன்று மற்றொரு முக்கியமான நாள் என்றார். இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இப்போது நாட்டின் கிராமங்களில் நல்ல தரமான, அதிவேக இணையம் இருப்பது அவசியம் என்று தெரிவித்த அவர், அரசின் முயற்சியால் ஏற்கனவே ஆப்டிகல் ஃபைபர் நாட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பஞ்சாயத்துக்களை எட்டியுள்ளது என்றார். கடந்த 6 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுவான சேவை மையங்களும் ஆன்லைனில் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்த இணைப்பை விரிவுபடுத்தும் குறிக்கோளுடன் நாடு முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளது எனவும், இது அவர்களுக்கு கிடைத்த சுதந்திரம் என்றும் தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு