அரசியல்

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

குஜராத் மாநிலம் கெவாடியாவில் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் ஏறி பிரதமர் மோடி பயணம் செய்தார். இதன் மூலம் கெவாடியாவில் இருந்து சபர்மதி ஆற்றங்கரை இடையிலான பயண தூரம் 4 மணியில் இருந்து 45 நிமிடங்களாக குறையும் எனக் கூறப்படுகிறது. 14 பயணிகள் வரை சுமந்து செல்லும் வகையிலான பிரிவு 2பி வகை மிதவை விமானங்கள், தினமும் எட்டு தடவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான முதல் கடல் விமான சேவை இந்தியாவுக்கு புது சகாப்தம் என அனைவராலும் பாராட்டப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை