யாருடன் கூட்டணி வைக்கலாம்?- நிர்வாகிகளிடம் யோசனை கேட்ட ராமதாஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று பாமக நிர்வாகிகளிடம் கட்சியின் நிறுவனர் ராமாதாஸ் கருத்து கேட்டார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்திமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில், திமுக, அதிமுக, தவெக இவற்றில் எந்த அணியுடன் கூட்டணி வைக்கலாம் என நிர்வாகிகளிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிர்வாகிகள், இறுதி முடிவை ராமதாஸ் எடுப்பார் என்று தெரிவித்தனர். இதற்கிடையே, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணியை இறுதி செய்வார் என்று பாமக எம்எல்ஏ சேலம் அருள் தெரிவித்தார்.