இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பல்வேறு தடுப்பு மருந்துகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டு மக்களிடம் பேசிய அவர், தடுப்பு மருந்துகள் தயாரானால், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று கூறினார்.