அரசியல்

"தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம்" - மோடி

வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

தந்தி டிவி
வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். வெற்றியை பாஜக தொண்டர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்தார். முதலில் தாம் ஒரு பாஜக தொண்டன் எனவும், அதன் பிறகு தான் இந்த நாட்டின் பிரதமர் என்றும் மோடி கூறினார். வாரணாசி மக்கள் மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த மோடி, வாரணாசியில் பெண்கள் நடத்திய பேரணி, நாடு முழுவதும் வேகமாக பரவியதாகவும், ஒவ்வாரு வீட்டிலும் ஒரு மோடி, இந்த தேர்தலுக்காக பணியாற்றி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். வாரணாசியில், தமக்கு எதிராக போட்டியிட்டவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக, தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்