பா.ஜ.க. அரசு உருவாக்கிய பொருளாதார பேரழிவை எதிர்க்கொள்ள தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் திணறி வருவதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை கபளீகரம் செய்வது எல்லாம் பிரச்சனைக்கு தீர்வுக்காண உதவாது என்றும், மத்திய அரசின் நடவடிக்கை, துப்பாக்கி காயம் பட்ட நபருக்கு, மருந்தகத்தில் உள்ள பேண்ட் எய்டை திருடி ஒட்டுவதற்கு சமம் என்றும் ஒப்பிட்டு ராகுல்காந்தி விமர்ச்சித்துள்ளார்.