Parliament | ``மக்களே MLA, MPக்களை பதவியை விட்டு தூக்கலாம்.. 5 வருஷம் காத்திருக்க வேண்டாம்’’ #parliament #democracy #election "செயல்படாத எம்பிக்கள், எம்எல்ஏக்களை வாக்காளர்கள் ஏன் திரும்ப பெற கூடாது? " இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது அதிருப்தி ஏற்பட்டால் மக்கள் அவர்களை திரும்பப் பெறும் முறையை அறிமுகப்படுத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ராகவ் சதா மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். தற்போது ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐந்தாண்டுகள் நிறைவடையும் வரை செயல்படாத தங்களது பிரதிநிதியை மாற்ற மக்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இது இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் உள்ள ஒரு முக்கிய குறைபாடு என்றும் கூறினார். மேலும், உலகில் கனடா , சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 24 ஜனநாயக நாடுகளில் அதிருப்தி ஏற்பட்டால் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் திரும்பப் பெரும் முறை அமலில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.