திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஷ்னேவா தலைமுடி காணிக்கை செலுத்தினார். சில தினங்களுக்கு முன்பு, இவரது மகன் மார்க் சங்கர் படித்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், காயமடைந்த மார்க் சங்கர், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தீ விபத்தில் சிக்கி தனது மகன் பத்திரமாக வீடு திரும்பியதை அடுத்து, திருப்பதி கோயிலுக்கு சென்றார். இவர் கிறிஸ்துவர் என்பதால், தேவஸ்தான முறைப்படி இந்து கோவில்களின் மத அடிப்படையில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு பிறகு தலை முடி காணிக்கை செலுத்தி, சாமி தரிசனம் செய்தார்.