அரசியல்

4 தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு : இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தீவிரம்

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே மாதம் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட இதுவரை 98 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சனி, ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால் வேட்புமனுக்களை பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று வேட்புமனு பெற கடைசி நாளாகும். திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே, வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று, அதிமுக, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். இதையடுத்து நாளை, வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2ஆம் தேதி கடைசி நாளாகும்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை