``பரமசிவம் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்’’ - உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை #admk #palladam பல்லடத்தில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரமசிவம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்லடம் நான்கு வழிச் சாலையில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பணிமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்லடம் வேட்பாளர் பரமசிவம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.