உலக அளவில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதையல் கிடைக்க கூடிய இடமாக தமிழகம் இருந்து வருகிறது என்று
அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கபட உள்ளது என்று கூறினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.