சட்டப்பேரவையில் இடமாற்றம் மற்றும் தலைவர்களின் புகைப்படம் தொடர்பாக செங்கோட்டையன், ஓ.பி.எஸ். மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. செங்கோட்டையன் இடம் மாறியதாக ஓ.பி.எஸ். கூறிய நிலையில், ஜெயலலிதா புகைப்படம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை இதயத்தில் நிலையாக வைத்திருப்பதாக தெரிவித்தார்.