முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., திமுகவில் இணைந்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் துரோகம் செய்து விட்டதாக குறிப்பிட்டார்.