ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய அமைப்புகளுக்கு ஓ.என்.ஜி.சி. ரூ.671 கோடி நிதி? ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய 20 அமைப்புகளுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம், 12 ஆண்டுகளில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியாக 671 கோடி ரூபாய், வழங்கியதாக தகவல் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2013 முதல் 2025-ஆம் ஆண்டு வரை ஓ.என்.ஜி.சி. நாடு முழுவதும் வழங்கிய, சி.எஸ்.ஆர். எனப்படும் சமூகப் பொறுப்பு நிதியில் சுமார் 14.7 சதவீதம் என கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். உடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய 20 அமைப்புகள் நிதி பெற்றதாக வெளியாகியுள்ள தகவல், பொதுத்துறை நிறுவனங்களின் நிதி பயன்பாடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.