குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் அன்றே..
நடப்பாண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி கூடுகிறது என மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரத்திற்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கூட்ட பரிந்துரை செய்திருந்தது. குடியரசுத் தலைவர் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில் மக்களவை செயலகம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த முறை மழைக்கால கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதி கூடுகிறது.